Monday, April 6, 2020
View point of corona |உலக நாடுமக்களின் பார்வையில் கொரோனா part 3
பல்துறைகளின் வளர்ச்சிக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் அடிப்படையான கல்வி, செல்வம் மற்றும் வீரத்திற்கு தற்போது குறைவில்லை என்ற எண்ணத்தோடு செயல்பட்ட உலக நாடுகளின் மகிழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உயிர்கொல்லி தொற்றுநோய் கொரோனா என்ற வைரஸின் மூலமாக உருவெடுத்தது.
வளர்ந்து வரும் நாடுகள் வல்லரசு நாடுகள் என்ற வேறுபாடு இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக சீர்குலைக்கும் வகையில் தனது வீரியத்தை கரோனா வைரஸ் வெளிப்படுத்தியது.வைரஸ் எங்கிருந்து பரவியது?, எப்படி பரவியது?, ஏன்?எதற்காகப் பரவியது? என்றெல்லாம் ஆராயத் தொடங்கி பின் உரிய மருந்து தற்போது வரை கண்டுபிடிக்கப்படாத காரணத்தால் முதலில் முன்னெச்சரிக்கையோடு உயிரைக் காத்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தை பலரும் உணரத் தொடங்கினர்
உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் மக்கள் ஊரடங்க உத்தரவால் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இந்நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் செலவு செய்யும் நிலை உருவாகியுள்ளதால் தேவையின்றி செய்யப்படும் ஆடம்பரச் செலவுகளைப் பற்றி மக்கள் அறிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகவும் கருதப்படுகிறது. மற்றொறு வகையில் அத்தியாவசியத் தேவைகளையே பூர்த்தி செய்ய இயலாமல் தவிக்கும் மக்களுக்கு உதவி மனிதம் போற்றும் பண்பையும் வெளிப்படுத்துகிறது.
பல நாடுகளில் 60 வயதிற்கும் அதிகமான மக்களைத் தாக்கும் கரோனா இந்தியாவில் மட்டும் 21-40வயது வரையிலான இளைஞர்களை அதிகமாக தாக்கியுள்ளது என்ற Union health ministry அறிவிப்பு பலரை வியப்படையச் செய்கிறது.கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை புதைக்க இடமில்லை என்ற தகவல்கள் கண்ணீரைத்தான் நினைவூட்டுகிறது.இது போன்ற பல வரலாறு காணாத துயரச் சம்பவங்களுக்கு இடையில் இந்தியாவின் ராய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் இன்னல்களைத் தாண்டி குணமுடன் பிறந்த இரட்டை ஆண் மற்றும் பெண் குழந்தைக்கு கரோனா, கோவிட் என அவர்களின் பெற்றோர் பெயரிட்டனர்.
இத்தகைய உயிர்கொல்லி தொற்றுநோய் தற்போது கற்றுக் கொடுக்கும் பாடங்களைக் கொண்டு இனிவரும் காலங்களிலும் எச்சரிக்கையோடு செயல்படுவதோடு தற்போது அரசின் உத்தரவைக் கடைப்பிடித்து கரோனா நோய்த்தொற்று பரவாமல் நம்மைக் காத்துக் கொள்வதே தலையாய கடமை
Recommended Articles
- Learning
LPG Cylinder new home delivery rules act from Nov1| எனது சிலிண்டர் டெலிவரி பன்னுறதுல புதிய ரூல்ஸ் நவம்பர்லா வருதா Oct 18, 2020
LPG Cylinder new home delivery rules act from Nov1எல்பிஜி சிலிண்டர் புதிய வீட்டு விநியோக விதிகள் நவம்பர் 1 முதல் செயல்படுகின்றன #LPG #LPGcylinder...
- Learning
SBI door step banking தெரியுமா? இதோ தெரிந்து கொள்ளுங்கள் Oct 18, 2020
எஸ்பிஐ வீட்டு வாசலில் வங்கி சேவை வசதி எவ்வாறு செயல்படுகிறது நாட்டின் சிறந்த கடன் வழங்குநரான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) தனது வாடிக்க...
- Learning
Is your mobile number not registered in your Aadhaar? உங்கள் மொபைல் எண்ணை உங்கள் ஆதாரில் பதிவு செய்யவில்லையா? கவலைப்பட வேண்டாம் OTP ஐப் பெற எந்த மொபைல் எண்ணையும் பயன்படுத்தலாம்Oct 17, 2020
உங்கள் மொபைல் எண்ணை உங்கள் ஆதாரில் பதிவு செய்யவில்லையா? கவலைப்பட வேண்டாம் OTP ஐப் பெற எந்த மொபைல் எண்ணையும் பயன்படுத்தலாம்புதிய ஆதார் பி.வி.சி அட்டை ம...
- Life mantra
Make money online part-1| ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம்Aug 21, 2020
You can make money online part-1 பகுதி -1 ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க நான் பயன்படுத்திய சரியான முறைகளை நான்...
Newer Article
TNPSC Question Bank- Part1 |
Older Article
StayatHome| Celebrities Photos from their Twitter account |9pm9minutes
Labels:
Trending News-Tamil
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment